உன்னை தொட்டு விட்ட மழைத்துளிகளை பார்த்து, இன்னும் கறுத்தது வானம், என் முகமும் தான்...
தேங்கிய குட்டையில், தெளிவாய் அவள் முகம்..
கல்லெறிந்து கலைக்க நினைத்தேன், முந்திக் கொண்டது மழை!
Thursday, September 15, 2011
மழையே ... மண்ணில் வீழ்ந்து மடிந்திடும் முன் என்னில் இரணமாய் போன இதயத்தை நனைத்திடு... அப்படியாவது குளிரட்டும்.!. அவளால் எரிக்கப்பட்ட எனது உயிர்...
என் வாழ்க்கையின், வெறுமையான பக்கங்களை, வண்ண மயமாக்க, ஓவ்வொரு பக்கத்திலும் உன் பெயரை எழுதி வைத்தேன்....... என் அன்பை நீ ஏற்று கொண்டால்,, அது கவிதை ஆகும்.... மறுத்து விட்டால், அது காவியமாகும் ......
உன்னிடம் சொல்ல எனக்குதான் தகுதி இல்லை, ஒவ்வொரு முறை துளிர்க்கும் போதும் கிள்ளி எரிகிறேன் , வேரை எடுக்க மனமில்லை , என்னுள் மட்டுமாவது வாழ்ந்து விட்டு போகட்டுமே , என் காதல்..