நிலவு கூட தூரம் தான்
கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கிறது..
நம் உறவு கூட தூரம் தான்
பேச இனிமையாய் இருக்கிறது..
அந்தி வானமும் தூரம் தான்
பார்க்க கலையாய் இருக்கிறது..
அலைச்சல் கூட இன்பம் தான்
தொலைபேசியைப் பார்க்கும் பொழுது
என் மனம் கூட மென்மை தான்
உன் குரலைக் கேட்கும் போது
இரவு கூட பகல் தான் - நான்
உன் எண்ணத்தில் மிதக்கும் போது
மௌனம் கூட இனிமை தான்
உன் நினைவு என்னை வாட்டும் போது..!!
No comments:
Post a Comment