Thursday, June 30, 2011

ஒவ்வொரு இதழும்..


ஒவ்வொரு இதழும்..
உன் நினைவை கொண்டு வருகிறது ...
ஒவ்வொரு நாளும்..
நீ என்னை பார்த்து..
உன் உதட்டை அசைத்து பேசும் போது..

என் கவிதைகள்


எல்லாவற்றையும் ..
இழந்த பின்னும்.....
நான் வேரூன்றி
நிற்ப்பதென்னவோ
உன் நினைவு நீரோட்டத்தினால் தான்....!!

Wednesday, June 29, 2011

என் கவிதைகள்

என் கவிதைகள் அழிந்தாலும் 
என் காதல் பொய்யானாலும் 
உன்னை நினைத்தே என் உருவம் சிதைந்தாலும் 
உன்னால் நான் அடைந்த 
அனுபவங்கள் அனைத்தும் 
என் உயிரின் ஆணி வேரில் 
என்றும் எழுதி இருக்கும்..

Saturday, June 25, 2011

நான் காண ...

தூக்கம் என்னை தழுவும் போதும்
நினைவாக நீ வருகிறாய் ..
கண் மூடினால் நீ மறைந்து விடுவாய்-என்று
எண்ணிய என் கண்கள் மூட மறுக்குது.
கண்ணில் இருக்கும் நீ
எப்படி என் கண்ணீரானாய்.
கண்மணியே கரைந்து விடாதே!
என் கண்ணுக்குள் என்றும் இருந்து விடு
என்றும் உன்னை நான் காண ...

முடிவு

முடிவு சொல்ல நினைத்தேன் அவளிடம் ..
முடியாமல் திரும்பி வந்தேன் .
அவளிடம் பொய் சொல்ல கூடாது என்று இருந்த நான் .
அவளிடம் பொய் சொல்லி திரும்பி வந்தேன் ..
மீண்டும் அவளை பார்க்க துடித்தேன் .
பார்க்காமல் விலகினேன்.
நான் அவளுக்க காத்திருந்த இடத்தில்.
சிந்திய ரோஜா இதழ்களை பார்த்து சிரித்து கொண்டாள்.
அப்போது தான் அவள் புரிந்து கொண்டாள் ..
நான் இப்பவும் அவளுக்காக காத்திருப்பதை..

என் கண்கள்!!

போறேன் என்றாய்!
போ என்று பொய் சொன்னது என் உதடுகள்.
பொய் சொன்ன என் உதடுகளை பாக்க மறந்த உன் கண்கள்.
அதை தினம் நினைத்து ஏங்கும் என் மனம்.
நீ சென்ற பாத சுவடுகளை தினம் தினம் பார்த்து
கண்ணீர் விடும் என் கண்கள்
உன்னோடு கை பிடிக்க காத்திருந்த என் கைகள்.
உன்னை நினைத்து தினம் தினம் கவிதை
எழுத துடிக்கும் என் கை விரல்கள் ..
அந்த கவிதையை படிக்க ஏங்கும் என் உதடுகள் .
உன் வரைவை எதிர் பார்த்து ஏங்கும் என் மனம் ,
உன் காதலை சுமந்து குடி இருக்கும் என் இதயம் ..
உன்னோடு சேர்ந்து நடக்க காத்திருக்கும்
என் கால்கள் ..
அந்த ஜோடி தடங்களை ஆசையாக பருக
காத்திருக்கும் என் கண்கள்.
காத்திருக்கும் என் கண்களை தவிக்க விடாதே .
தந்குவதுக்கு சக்தி இல்லை ..
ஏங்கி தவிக்கிறேன் உன்னை நினைத்து ..
ஒரு முறையாவது வந்து புன்னகைத்து விட்டு சென்று விடு ..!!!!!

நீ என் முன்னே !!

நீ தந்த நினைவுகளையும் .
நீ விட்டு சென்ற சுவடுகளையும்
தினம் தினம் மீட்டு பாக்கிறேன்.
நீ என் முன்னே இருப்பதாய் உணர்ந்து....

காதல் !காதல் !

உன் இதயம் வேறு!

என் இதயம் வேறு -

ஆனால்

காதல் எனும் வார்த்தையால்
ஒன்றாய் இணைந்ததடி நம் இதயங்கள் ..
உன்னுள் நானும்
என்னுள் நீயும்....!!

பிரியாத இதயங்களாய் என்றும்
வீசுவோம் நாமமுள் .காதல் இதயங்களாய் ..!!

நமக்குள் ஏது இடை வெளி ..

நமக்குள் ஏது இடை வெளி ..
உன் இதயத்தினுள் இருப்பது என் இதயம்
என் இதயத்தினுள் இருப்பது உன் இதயம்
இரு இதயங்களின்
காதல் எனும் வார்த்தை
ஒரு இதயமாய்
உருமாறி நம்முள் பரிமாறுகிறது
இதுதான் உன்னுள் நான் என்னுள் நீ ..!!

சந்தோஷம்

ஆயுள் முழுதும் அன்பே!
உன் அருகில் வாழ்ந்திட நினைதேன்.
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே ...
உன் அருகாமை அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே சந்தோஷம்!!!

காதலே உன்னை என்ன செய்ய

காதலே !!
உன்னை என்ன செய்ய ?
பகலா ? இரவா ?
புரியாத காலநிலை !!
எப்போதுமின்றி என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது!
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில் தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது ...!!

அன்பே

அன்பே !!
உன்னிடம் என்னிடம் கலந்த
காதலிடம் நாம் கண்ட
கனவுகளிடம் தொலைத்த
நம் பொழுதுகளே
நினைவுகளின் சுவடுகளாய்
நம் காதலில் !!

உன் நினைவுகள் !!!!

கொட்டும் மழையிலும்
தொட்டு விடும் உன் நினைவுகள்.!!
ஒவ்வொரு துளியும் என்னை தொடும் போது.
நீ என்னை வருடிய நினைவுகள்.!!
பட்டு தெறித்த ஒவ்வொரு துளியிலும்
தெரியுதடி உன் வதனம்.!!
நீ என்னை முத்தம் இட்டது போல்
தொட்டு செல்லுதடி ஒவ்வொரு துளியும் .!!
கொட்டும் மின்னல் ஒளியும்
காதை பிளக்கும் இடியும்.!!
உன் நினைவில் இருந்து என்னை பிரிக்க முடியாமல் தவிக்குதடி.
விட்டு விட்டு தான் மழை துளி என்னை தொட்டலும்
விடாமல் தொடருதடி உன் நினைவுகள் என்னை ..
Edit

உன் காதல் !!!

நீ இருக்கும் வரைக்கும் தான்
உன் நினைவுகள் என்று எண்ணி விட்டாயோ!
நீ சென்ற பின்பும்
உன் நினைவுகள் என்னுள் இருக்கும்
உன் காதல் பாதம் பதித்த என் இதயத்தில்.

பூக்கள் தூவி உன்னை வரவேற்க வில்லை
புன்னகை தூவி தான் வரவேற்றேன்.
என் புன்னகையை மட்டும் ரசித்தவளே!
ஏன் இன்று மட்டும்
புன்னகை பூத்த வதனத்தை
சோகம் பூச வைத்து விட்டாய்.

நீ செல்லும் போது.
உன் நினைவுகளை தந்து விட்டு-கைமாறாய்
என் புன்னகையை பெற்று கொண்டாய் .
உன் நினைவுகள் என் புன்னகையை விட
சந்தோசம் தருகுதடி எனக்கு .!!

ஏக்கம் !!!

என் தன் நெஞ்சில் ஒரு ஏக்கம்
உன்னை பார்த்த மறுகணம் .
உன்னை கை பிடிக்க எண்ணுகிறேன் .
உன்னை பார்க்க மறந்த போது
உன் நினைவுகள் என்னில் வந்தது.
என் சோகம் என்னை தழுவிய போது
உன் புன்னகை என்னை சந்தோசமாக்கியதடி.!!

முத்தம்

நான் சொல்லும் ஒற்றை வரி வார்த்தையை
உன் உதட்டுகளால் கேட்க நினைக்கிறேன்.
என் கன்னத்தில் நீ இட்ட முத்தம் அழியுதடி
உன் உதட்டு சாயம் போல .
உன் உள்ளதை போல அதுவும் போலிதானா?
முத்தம் இடு உன் இதயம் கொண்டு.
வாங்கி கொள்கிறேன் என் இதயத்தில்
என்று அழியா வண்ணம் ..
காத்திருக்கும் என் காதலுக்கு
நீ தரும் பரிசாக....

காதல் !காதல் !

உன்னோடு நான் பேசும் வரிகளை.
கவிதை எனும் மாலையாய் தொடுக்கிறேன்.
நீ வந்து சூடிகொள்
நான் எழுதும் வரிகளை.
ஒவ்வொரு வரியிலும் சொல்லுவேன் என் காதலை
ஒவ்வொரு முறை நீ படிக்கும் போது
நீ புரிந்து கொள் என் காதலை.
சொல்லாமல் நான் காதலிக்க வில்லை உன்னை
உன்னிடம் சொல்லி விட்டுதான் காதலிக்கிறேன்.
உன்னை என் காதல் மனைவியாக்க எண்ணி
என்றும் நீ என்னோடு வருவாயா காதல் செய்ய.
காத்திருக்கிறேன் என் காதலோடு ... ....!!!

என் அன்பே !

என்னவளே உன்னை நான் என்னில்
உறவமாய் செதுக்கி விட்டு
எப்படி இன்னொருத்தியை உருவமாக்க முடியும் ...
உள்ளிருக்கும் நீ வலிகள் தாங்கினாள் நான் எப்படி தங்குவேன் ..
புரியாத உனக்கு என் வலிகள்
தெரியாத என் காதலின் ஆழம்.
என் இதயத்துக்குள் தானே நீ இருக்கிறாய்
என் இதயம் துடிப்பது கூட உன்னை நினைத்து தானே!
என் அது கூட உள்ளிருக்கும் உனக்கு
கேட்க வில்லையா சொல்லு என் அன்பே !

ஒன்றும் இல்லை

என்னிடம் ஒன்றும் இல்லை
இனி உனக்கு நான் குடுப்பதுக்கு ..!!

நீ என்னை மறவாத நினைவுகளை
நான் தந்து விட்டேன் ..!!

என்னில் இருந்து பிரிக்க முடியாத நினைவுகளை
நீ தந்து விட்டாய்..!!

உன்னோடு வாழ்ந்த நிமிடங்களில்
நான் என் வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொண்டேன் !!!

காதல் !காதல் !

எங்கோ உயிர் பெற்றோம் !
எங்கோ வளர்க்கப் பட்டோம் !
எப்பொழுதோ புன்னகைத்தோம் !
எப்படியோ பறிக்கப் பட்டோம் !
இப்பொழுது இங்கு ஒன்றாய் !
இறந்து கிடக்கிறோம் !
பிரிந்து பிறந்த நம்மை
இங்கு ஒன்றாய் இணைத்ததுக்
காதல் !

ஆசை....

பொய் பேச துடிக்கும் -ஆவளது
உதட்டு சாயம் பொருந்திய உதடுகள்
என்னை காதல் செய்ய துடிக்கிறது ..அவளது
வெள்ளை மனது.
கை பிடித்து நடக்க எண்ணுகிறது
அவளது கரங்கள்
என் காலோடு அவளது காலும்
ஒரே திசையில் நடக்க எண்ணுகிறது
என் கண்ணை பறித்து கொள்ள துடிக்கும் அவளது கண்கள்.
என்னை வருட துடிக்கும்
அவளது கரத்தின் விரல்கள்
இத்தனை ஆசை இருந்தும்
என்னை ஏன் வெறுக்க நினைக்கிறது அவளது மனது..

என்னவள்

வார்த்தைகள் இல்லாமல்
வர்ணனை இல்லாமல்
அடுக்கு மொழிகள் இல்லாமல்
எழுத கவிங்கனே இல்லாமல்
ஒரு வார்த்தை கவிதை

என்னவள்

அவள் வந்த நாள் முதல்..

சுமையாக இருந்தாலும்

சுகமாக துடிக்கிறது இதயம்...

என்னுள் அவள் வந்த நாள் முதல்.....

காலங்கள்

காலங்கள் மாறினாலும்
கண்களில் பிறந்த காதலை
இதயங்கள்
மாற்றிகொள்வதுமில்லை...
மறப்பதுமில்லை.....

கருணையிருந்தால்....?

கருணையிருந்தால்....?
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்.....
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!....!

நினைவு

வானம் கூட புள்ளிதான்
எனக்குள் இருக்கும் உன்
நினைவுகளுக்கு மத்தியில்.......

தனிமை

அன்று நான் உன்னோடு இருந்த போது,
தனிமையை வெறுத்தேன்!
இன்று நீ என்னை வெறுத்த போது,
தனிமை எனை வெறுக்கவில்லை...!!

உன்னை பற்றி ....!

வாய் மூடிக் கிடக்கிறேன்...
மௌனம் பேசுகிறது....
யாருக்கும் தெரியாமலே..!"
உன்னை பற்றி ....!

சொல்லிவிட முடியாது....!

வார்தைகளாலோ?
கவிதைகளாலோ?
கண்ணீராலோ?
சொல்லிவிட முடியாது....!
என் மனதின் ரணங்களை...!
உன்னை விட்டு மட்டும்தான் போகிறேன்.
இந்த உலகத்தை விட்டு அல்ல...
எங்கோ ஒர் மூலையில்
நீ நலமுடன் வாழ இறைவனை
வேண்டிய படி....!!

Sunday, June 12, 2011

வலிகள்

கணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்சிபோல!!

நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்டாய் ,,,,,!!!

அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும் !

வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு..!

காத்திருப்புகள்

உனது ஒரு நொடிப்
பார்வைக்குத் தானடி !!!!

எனது ஓராயிரம் நிமிட
காத்திருப்புகள்... !!!!!!!

உன் கையில்...

வாழ்வில்
நம் காதல்
வாழ்வதும்

...என் மரணத்தில்
என் காதல் வாழ்வதும்


உன் கையில்...

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!

(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

என்னக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!!!

தாய்மை

உருவங்கள் மாறிப் போயினும்
உணர்வுகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது
ஒரு தாய்மையின் முகவரியை !

உன் நினைவுகள்

பகலின் பரபரப்பு
இரவின் மௌனம்
மாறி மாறி வந்தாலும்
மாறாததும்
மறையாததும்
உன் நினைவுகள்

பொய்

அப்பட்டமான பொய்யினை
நயமாய்ச் சொன்னால்
அது கவிதை..
அப்பட்டமான அழகை
நயமாய் வரைந்தால்
அத்தனையும் நீயாகிறாய்.

உண்மை அறியாமல்

மனமெனும் கடலில்
உன் நினைவெனும்
ஆயிரம் நட்சத்திரங்கள்..!!

கரையோரத்தில் நான்??

அவை வானின் பிரதிபலிப்புகள்
எனும் உண்மை அறியாமல் !!!

கால்கள்

உன் கால் சுவடுகளில்
தடம் பதிக்கவா ?

இணையாய் நடக்கவா ?

தெளிவில்லாமல் தவிக்குதென்
கால்கள் !!!

உறுதியானது

நான் செல்லும் வழியெல்லாம்
உன் முகமே நிறைந்திருந்தும்,
உன் வழியில்
என் சுவடே இல்லையென்பதும்,

என் மனதில்
நீ பேசாத வார்த்தைகளும் நிறைந்திருந்தும்,

உன் செவியில் நான் பேசியவையும்
நிலைக்கவில்லையென்பதும்,
தெரிந்திருந்தும்

உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,

உறுதியானது

என் மரணத்திற்கான
உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது !!!

உன் நினைவு

காதல் என்பது
கரும்பலகை அல்ல,!
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது !!
என்றும் நிலைத்திருக்கும்...
ண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...!!

கடவுச்சொல் காதல்!!

இந்த கணிப்பொறியின்
கடவுச்சொல் ஆகவோ ..!!
இல்லை..
எனக்கான கடைக்குட்டி
மகளின் பெயர் ஆகவோ ..!!
இல்லை ..
கவிதைத்தூண்டுகோல் ஆகவோ !!
மட்டுமே பயன்படுவாள் ..
ஆனால் வாரத்தில் ஏழு நாட்கள்
மட்டுமே நினைவில் வருவாள்.!!!

உன்னைப்போல்

தொட்டு போன தென்றல் !!
கடந்து ஓடும் நதி !!
கண்முன் மறையும் சூரியன் !!
உதிர்ந்துவிழும் பூ !!
இவை எதுவும் பாதிக்கவில்லை...
என்னை மறந்துசென்ற உன்னைப்போல்..!!

மயிலிறகு

பள்ளிச்சிறுவன்
புத்தகத்தில்

மயிலிறகை ஒழித்து

வைப்பதைப் போல

உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.

வைத்திருப்பவனின்
பிரியங்களை

ஒரு போதும்
புரிந்துகொண்டதேயில்லை

மயிலிறகும் நீயும்.

எழுதிய கை

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை

காதலி

என்னை காத்திருக்க வைக்காவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை !!!

மலரட்டும் !....

நான் வாழ்வதாயினும் வீழ்வதாயினும்
அ தன் தொடக்கம்
உன் முடிவுகளில் மலரட்டும் !....

யார் சொன்னது !??

சாலையோர மரமாய்
சலசலப்புடன் இங்கும் அங்கும்
பார்த்த படி நான் !.
நான் இமைத்து முடிப்பதற்குள் பிரம்மன்
படைத்து அனுப்பினானோ இவளை !?
சற்றுமுன் பார்த்த முகம்
யார் என்று தெரியவில்லை
வெகு நேரமாக திரும்பாமல் சென்றவள்
மறைந்துபோகுமுன் ஏனோ
திரும்பிப் பார்த்து சிறு
புன்னகை வீசி சென்றாள்.,
குழப்பத்தில் குதிக்கிறது மனசு .
காதல் ஒரு முறைதான் பூக்கும்
என்று யார் சொன்னது !???

சொல் எப்படி என்று..?

உன்னோடு பேசும் போது மட்டும்
என் பூ முகத்தில்
ஆயிரம் புன்னகை பூக்கள்
ஓரே நேரத்தில்
பூக்கின்றனவே அதெப்படி..?

உன்னோடு உரையாடும் போது மட்டும்
மண்ணென்றும் கல்லென்றும்
பாராமல் என்
மென்தண்டுக் கால்கள்
தானாக கோலமிடுகிறதே அதெப்படி..?

உன் கண்ணோடு பேசும் போது மட்டும்
என் கண்களிரண்டும்
கருவண்டை மறைக்கும்
வண்ணத்துப் பூச்சி போல்
மிக வேகமாக படபடக்கிறதே அதெப்படி..?

உன்னோடு பேசும் போது மட்டும்
என் முகம் மதி மயக்கும்
மாலை நேரத்து
அடிவானச் சூரியனாய்
சிவந்து போகிறதே அதெப்படி..?

எப்படி எப்படி என்று
உன்னிடத்தில் எதைக் கேட்டாலும்
குழந்தைச் சிரிப்பை
பதிலாகத் தருகிறாயே..?
அதையேனும் சொல் எப்படி என்று..?

காதல்

மௌனம் முன்னுரை எழுத
கண்கள் அணிந்துரை வரைய
இதழ்கள் வாழ்த்துரை வழங்க
அச்சு செலவு இல்லாமல்
அரங்கெரிய புத்தகம்

காதல்

உந்தன் ஞாபகங்கள்

உன்னை நேசித்தக் கணங்கள்
ஞாபகத்தில் இல்லை
ஆனால் தினம் சுவாசிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உந்தன் ஞாபகங்கள் நிரம்பி வழிகிறது !

காதல் !

உனக்கு முன் பிறந்தேன் நான்
எனக்கு பின் பிறந்தாய் நீ
ஆனால் நம் இருவருக்கும்
ஒன்றாய் பிறந்தது காதல் !

உனது வருகைக்காக..!!!

வார்த்தைகள் பல தொடுத்து
சேர்த்து வைத்த உரையாடல்கள் எல்லாம்
காத்துக்கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில்
உனது வருகைக்காக..!!!