Monday, September 6, 2010

பெண் குழந்தை




கண்ணின் மணி போல எனை
கருவறையில் காத்தவளே
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா?

பெண்ணென்ற கலக்கமா,
பெற்றவளே உன்நெஞ்சில்!

கள்ளமில்லா என் தாயே -உன்
உள்ளம் நினைப்பதென்ன...

நெல்லின் மணி கொண்டு
நெஞ்சை நிறுத்தவா...

கள்ளிப் பால் வார்த்து
கல்லறை படைக்கவா...

வேண்டாம் தாயே
விபரீத எண்ணம்
அள்ளி அணைக்க
மனமில்லையென்றால்
அரசுத் தொட்டிலில்
போட்டுவிடு..!

No comments:

Post a Comment