Friday, September 17, 2010

பாகபிரிவினை :

அமைதியாக முடிந்தது
பாகபிரிவினை...

அசையா சொத்துக்களும்
அசையும் சொத்துக்களும்
யாரு யாருக்கு என்று,,,,

பிரச்சினை
அம்மா அப்பா வில் தான்..

முடிவுக்கு வராமல் தவித்தார்கள்..
குல விலக்காய் வளர்ந்த மகள் வந்தாள்
சுமூகமாய் பிரித்தால்...

அம்மா அமெரிக்காவில் இருக்கும் அண்ணனுக்கு
அப்பா சென்னையிலிருக்கும் தம்பிக்கு
என்று..
பிரித்தது அம்மா அப்பா வை மட்டுமல்ல
மனித நேயத்தையும் தான்...

No comments:

Post a Comment