தண்டனை........'
நேரில் பார்க்கயிலே
ஓடி ஒளிந்து கொண்டவள் நீ
சிறிது தூரம் சென்றதும்
என்னை திரும்பி பார்த்தவள் நீ
நான் இங்கிருக்க
என் மனதை திருடியவள் நீ
சின்ன சிரிப்பால்
என்னை சிறைவைத்தவள் நீ
கொள்ளை அழகால்
மனதை கொள்ளை கொண்டவள் நீ
அனைத்தும் செய்தவள் நீ
தனிமை தண்டனை மட்டும் எனக்கா?
No comments:
Post a Comment