Sunday, June 12, 2011

உறுதியானது

நான் செல்லும் வழியெல்லாம்
உன் முகமே நிறைந்திருந்தும்,
உன் வழியில்
என் சுவடே இல்லையென்பதும்,

என் மனதில்
நீ பேசாத வார்த்தைகளும் நிறைந்திருந்தும்,

உன் செவியில் நான் பேசியவையும்
நிலைக்கவில்லையென்பதும்,
தெரிந்திருந்தும்

உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,

உறுதியானது

என் மரணத்திற்கான
உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது !!!

No comments:

Post a Comment