உன் முகமே நிறைந்திருந்தும்,
உன் வழியில்
என் சுவடே இல்லையென்பதும்,
என் மனதில்
நீ பேசாத வார்த்தைகளும் நிறைந்திருந்தும்,
உன் செவியில் நான் பேசியவையும்
நிலைக்கவில்லையென்பது
தெரிந்திருந்தும்
உன்னுடன் மணமாலைக்கு ஆசைப்படும்
என் மனதிற்குப் புரியவில்லை,
உறுதியான
என் மரணத்திற்கான
உன் மலர்வளையம் மட்டும்தான் என்பது !!!
No comments:
Post a Comment